மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை – இன்றிலிருந்து ஆரம்பம்

Spread the love

மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை – இன்றிலிருந்து ஆரம்பம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மின்சார இணைப்பின்றி வாழுகின்ற குடும்பங்களுக்கும், மிக கஷ்ட நிலைமையில் வாழுகின்ற குடும்பங்களுக்கும் இலவசமாக மண்ணெண்ணை வழங்கும் திடம் ஆரம்பிக்க பட்டுள்ளது

மட்டக்களப்பு குச்சவெளி பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் மாண்புடன் தெரிவித்தார்.

இலங்கை நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மிக கஷ்ட நிலைமையில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு இந்த உதவிகள் சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்த பட்டுள்ளது

வறுமைக்குள் உள்ளான குடும்பங்கள், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுள், மின்சார வசதியற்று வாழுகின்ற குடும்பங்கள் ஆகியோருக்கு வீட்டுத் தேவைக்கான மண்ணெண்ணையை இலவசமாக வழங்க படுகிறது

திட்டமிடப் பட்டுள்ளதாகவும், அதன் ஆரம்பக் கட்டமாக புல்மோட்டை பிரதேசத்துக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் ஏழ்மை நிலைமையில் வாழுகின்ற
குடும்பங்கள் தங்களின் தகவல்களை புல்மோட்டை உப அலுவலக தவிசாளர் காரியாலயத்திற்கு (திருமலை சந்தி) வருகைதந்து சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது

இந்த இலவசமாக மண்ணெண்ணை பெற்றுக்கொள்ள விருப்புகின்றவர்கள் தங்களின்

பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டு மண்ணெண்ணையை பெற்றுக் கொள்வதற்கான டோக்கனை பெற்றுக் கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் நிலவும் வாழ்வாதர நெருக்கடி மாற்று பொருட்கள் தட்டுப்பாடு நிலைமை காரணமாக மக்களை காப்பாற்றும் நோக்கத்தில் ஏற்படுத்த பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்று கொள்ள பட்டுள்ளது

மக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை – இன்றிலிருந்து ஆரம்பம்

தொடர்ந்து மக்களின் விருப்பை அறிந்து உரிய நேரத்தில் முன்னெடுக்க படும் இந்த இலவச மண்ணெண்ணை கையளிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இலவசமாக இந்த எரிபொருள் வழங்க ப்படுகின்றன செய்தி தற்போது காட்டுத் தீ போல பரவி வருவதால் பிர கிராமங்களை சேர்ந்த மக்களும் இங்கு வருகை தர ஆர்வம் காட்டுகின்றனர்

ஆனால் அவர்களுக்கு இவ்ரகளினாலே உதவிட முடியா நிலை ஏற்படுகிறது மின்சாரம்

நாள் தோறும் இரத்து செய்யப் பட்டு அது மின் வெட்டுக்கு உள்ளாகி வருகின்ற நிலையில் நாடு பல மணி நேரம் இருளில் மூழ்கியுள்ளது

இது போர்க் காலத்தை நினைவு படுத்தும் முகமாக உள்ளது இலவசமாக மண்ணெண்ணை வழங்கும் திட்டம் மேலும் தொடர வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பாக உள்ளது .

    Leave a Reply