மகளை துஷ்பிரயோகம் செய்த இராணுவ ஊழியர் கைது

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Spread the love

மகளை துஷ்பிரயோகம் செய்த இராணுவ ஊழியர் கைது

சுமார் 02 வருடங்களாக தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவ ஊழியர் ஒருவர் கொபேகனே பொலிஸாரால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்னிகம, வித்திகுளிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வவுனியா பம்பைமடு 17 வது காலாட்படை முகாமில் ஊழியராக பணிபுரிவது தெரியவந்துள்ளது.

மகளை துஷ்பிரயோகம் செய்த இராணுவ ஊழியர் கைது

சந்தேகநபர் சுமார் 02 வருடங்களாக 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக கொழும்பு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்திருந்தது.

இந்த தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கொபேகனே பொலிஸாருக்கு அறிவித்துள்ள நிலையில், விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நிகவரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளா