போலீசார் திடீர் தேடுதல் வேட்டை – 400 பேர் கைது
மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் பொலிஸார்
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் போதைப்பொருள் சட்டவிரோத
செயற்பாடுகள் தொடர்பில் 400 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய 171 தேடுதல் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் 171 பேர் சந்தேகத்தின் பேரில்
கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா போதைப்பொருள் தொடர்பில் 94 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்