பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Spread the love

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களையும் ஒரு காரையும் அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி, ஹப்புத்தளை பொலிஸ் பிரிவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அன்றைய தினம் இனந்தெரியாத குழுவினரால் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தின் சந்தேகநபர்கள் காரில் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் விசேட பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட காரில் வந்தது தெரியவந்துள்ளது.

எனவே, சந்தேகநபர்கள் மற்றும் குறித்த கார் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரியவந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிலைய கட்டளைத் தளபதி/ பொலிஸ் நிலையம் தியத்தலாவ – 1 – 859 1531

பண்டாரவளை பிரதேச செயற்பாட்டு அறை – 057 222 2260 / 057 – 223 1612 (R)