பொலிசாரின் விடுமுறை இரத்து
பொலிசாரின் விடுமுறையை எதிர்வரும் 15 ஆம் திகதி (ஜூன் 15) வரை இரத்துச் செய்வதற்கு
தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசு தொற்று பரவல் நிலைமையை தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறையை கடந்த 17ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை ரத்து செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டது. தொடர்ந்தும் பயண கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் படுவதால் பொலிசாரின்
விடுமுறையை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.