பேரூந்துகள் பறிக்க படும் – அவசர எச்சரிக்கை

Spread the love

பேரூந்துகள் பறிக்க படும் – அவசர எச்சரிக்கை

ஆசனங்களின் எண்ணிக்கையை மீறி, அதிகளவான பயணிகளை பஸ்களில் ஏற்றிச் சென்றால், குறித்த பஸ்களை மறு அறிவித்தல் வரை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியதாகத் தெரிவித்த அவர், குறித்த பஸ்களின் அனுமதிப்பத்திரமும் இரத்துச் செய்யப்படும் என்றார்.

மேலும் நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் 6,000 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட வேண்டிய நிலையில், 900 பஸ்களே சேவையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளதுடன், இதற்கான காரணம் பஸ்களில் சேவையில் ஈடுபட்டவர்கள்,தற்போது வேறு தொழில்களில் ஈடுபடுகின்றமையே காரணம் என்றார்.

அத்துடன், 3,000 இ.போ.ச பஸ்கள் சேவையில் ஈடுபட தயார்படுத்தப்பட்ட நிலையில், 1,500 பஸ்களே சேவையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

    Leave a Reply