வவுனியாவில் மக்களை வாள் – கோடரியால் வெட்டிய கும்பல்

Spread the love

வவுனியா – கோவில்குளம் பகுதியில், இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில், நால்வர் காயமடைந்துள்ளனர்.

மதுபோதையில் நின்றிருந்த குறித்த நபர்கள், வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன், வீடுகள் சிலவற்றுக்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.

இதனால் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற அவர், நிலைமை தொடர்பாக ஆராய்ந்ததுடன், தாக்குதலை மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறு, பொலிஸாருக்கு பணித்தார்.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

    Leave a Reply