பெண் மரணம் தொடர்பில் வௌியான தகவல்கள்

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Spread the love

பெண் மரணம் தொடர்பில் வௌியான தகவல்கள்

கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவர் நேற்று (15) இரவு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

75 வயதுடைய பெண் ஒருவரே இவ்வா்று உயிரிழந்துள்ளதுடன், பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய கருவாத்தோட்டம் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

பெண் மரணம் தொடர்பில் வௌியான தகவல்கள்

இசை ஆசிரியையான குறித்த பெண் கணவரின் மரணத்திற்குப் பின்னர் தனியாக வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் முகம் மற்றும் கைகளில் இரத்தக்கறை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெண் இறந்த இடம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் டிரிப் சுவிட்ச் அணைக்கப்பட்டு இருந்ததையும், மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததையும் பொலிசார் அவதானித்துள்ளனர்.

மின்சாரத்தில் தரையை சுத்தம் செய்யும் இயந்திரம் மூலம் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், அந்த உபகரணத்தின் வயரும் அறுந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.