பிரிட்டனில் அபாயம் -தீர்ந்த கொரனோ சாதனங்கள் – வேலைக்கு செல்ல மறுக்கும் மருத்துவ ஊழியர்கள்
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக PPE ,
முக கவசங்கள் ,கையுறைகள் ,மற்றும் கொரனோவின் முன் தடுப்பு பாதுகாப்பு பொருட்கள் முடிவுற்றுள்ள நிலையில் மருத்துவ
தாதிமார்கள் ,மருத்துவர்கள் ,மற்றும் அம்புலன்ஸ் சாரதிகள் போன்றவர்கள பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர் .
இவ்வாறு பலநூறு ஊழியர்கள் பணிக்கு செல்ல மறுத்து வீட்டில் தங்கியுள்ளனர் ,தமக்கு உரிய பாதுகாப்பு அங்கிகள் ,கவசங்கள்
இல்லாத நிலையில் தாம் ஆபத்தான நோயாளர்களுடன் பணியில் ஈடுபட முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்
விரைவாக வினியோகத்தை மேற்கொள்ளும் படி கேட்ட பொழுதும் ,குறித்த பொருட்களுக்கு தட்டு பாடு நிலவுவதால் அரசிடம்
சேமிப்பில் ஏதும் இல்லை ,அதனால் தற்பொழுது பேராபத்து நீடிக்கிறது
இதனால் மக்கள் பெரும் பீதியில் , உறைந்துள்ளனர் ,நோயால் பாதிக்க படுபவர்களுக்கு பனடோல் மாத்திரைகளே வழங்க படுகின்றன ,
எனினும் இந்த மாத்திரைகளினால் எவ்வித பயனும் இல்லை எனவும் மருத்துவமனை செல்லும் நோயாளர்கள் அங்கேயே இறக்கும் நிலை
ஏற்படுவதாக பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வரும் தமிழர்கள் ,தமது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்
எனவே மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,அரசு இதனை தொடர்ந்து கூறிய வண்ணம் உள்ளது