பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள் மது போதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையில் வீதியில் உறங்கும் பரிதாபம் .
இலங்கையில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்த தமிழர்கள் ,சிலர் மதுபோதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையால் ,மனைவி ,பிள்ளைகளினால் துரத்த பட்ட நிலையில் வீதியில் உறங்குகின்றனர் .
வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள்
இவ்வாறு வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள் கண்ணுற்ற சில மக்கள் இவரக்ளுக்கு உதவிட முன் வந்துள்ளனர் .
அவ்வாறு உதவிட வந்தவர்கள் தமது கடைகள் ,நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ,கொடுத்துள்ளனர் .
ஆனால் அங்குகூட இவர்களினால் ஒழுங்காக வேலைக்கு செல்ல முடியாது வேலையை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனராம் .
உடுப்புக்கள் கூட வாங்கி கொடுத்து ,உணவும் கொடுத்து வேலையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் .
அவ்வாறன மனிதநேய முயற்சிகளை மக்கள் மேற்கொண்ட பொழுதும் , அதனை புறம் தள்ளி ,அரசு பணத்தை பெற்று ,அதில் குடித்து இவ்வாறு வீதியில் உறங்குகின்றனர் என்கின்ற குற்ற சாட்டை ,இவர்களை அறிந்தவர்கள் முன் வைக்கின்றனர் .
மது போதைக்கு அடிமையான தமிழர்கள்
இவர்களின் இந்த மது போதைக்கு அடிமையான ,அவர்களது மனைவி,பிள்ளைகள் ,உடன்பிறந்தவர்கள் யாவரும் , இவர்களினால் பெரும் துயருக்கு உள்ளாகியுள்ளனர் என்கின்ற விடயமும் வெளியாகியுள்ளது .
ஆதாலால் பிரான்சுக்கு வருகை தந்து உலக நாடுகளை வியந்து பார்க்கும் அளவுக்கு நிமிர்ந்து நிற்கும் லைக்கா நிறுவனர் சுபாஷ்,
அவரும் இதே பிரான்ஸ் நாட்டில் குடியேறி பின்னர் இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
எனினும் இவர்களை நல்வழி படுத்தி ,சிறந்த முறையில் வாழவைக்க யாரவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்கள் விருப்பாகிறது .