பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டியவர் கைது
உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டி கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீதே, சந்தேகநபர் மேற்கண்டவாறு செய்துள்ளார்.
மரணமடைந்த அந்த பிச்சைக்காரன், அந்த ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் “நீ குளிக்கமாட்டீர் இல்லையா?
பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டியவர் கைது
குளிக்காவிட்டால் தீ வைப்பேன்” என பலமுறை அந்த சந்தேநபர் கூறியுள்ளார். அதேபோல, ஞாயிற்றுக்கிழமை (29) இரவு பெற்றோலை ஊற்றி கொளுத்திவிட்டார்.
விபரீதத்தை கண்ட அங்கிருந்தவர்கள், பிச்சைக்காரனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர் திங்கட்கிழமை (30) காலை மரணமடைந்தார்.
64 வயதான தர்மதாஸ என்பவரே மரணமடைந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் 27 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
- அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
- காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்
- மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
- சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
- டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்
- தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்
- வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்
- மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு
- வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி