பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு

Spread the love

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு

இலங்கை ,கொழும்பு ; நேற்று (29) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 2022 ஓகஸ்ட் 03ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய வெளியிடப்பட்டுள்ள இந்த

வர்த்தமானியில் 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைவதோடு, 9ஆவது பாராளுமன்றத்தின் 3ஆவது

கூட்டத்தொடர்
எதிர்வரும் ஓகஸ்ட் 03ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

    Leave a Reply