பதில் சொல்
இரவுகளை மட்டும்
இரவல் கேட்கிறாய்
இது தான்
இன்றுந்தன் காதலா
உன் இச்சை தீர்ந்ததும்
உதறி போனாயே
காதல் என்ற போர்வையில்
கண்ணீரை ஏன் தந்தாய்
சுகமான காதலை
சுமையாக்கி போனாயே
என்னை கொன்றிட தான்
எமனாகி வந்தாயா
தேடி வந்த போதெல்லாம்
தேய் பிறையை தேய்ந்தேனே
காலாவதி ஆகினேனோ
கழித்து விட்டு போனாய்
03-09-2022