கைது பயத்தில் இலங்கை ஓடி வந்த கோட்டபாய
கைது பயத்தில் இலங்கை ஓடிவந்துள்ளார் கோட்டபாய என , புது தகவல்கள் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தாய்லாந்தில் தங்கி இருந்த கோட்டபாய ,போர் குற்ற சாட்டில் கைது செய்ய படும் வாய்ப்பு ஏற்படலாம் என்ற நிலையில் ,அதில் இருந்து தப்பிக்க இலங்கை ஓடி வந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
முக்கிய மூன்று நாடுகளின் ஆதரவுடன் ,இலங்கையில் கோட்டபாய மற்றும் மகிந்த ராஜாபக்ச இணைந்து நடத்திய தமிழ் இனப்படுகொலை தொடர்பில், சர்வதேச நீதிமன்றினால் கைது செய்யப்படும் ,பிடிவிராந்து பிறப்பிக்க படலாம் ,என்ற நிலையில் தப்பி ஓடியுள்ளதாக தகவல் கசியவிட பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடரில் இலங்கை ,இம்முறை சிக்கி தவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
கைது பயத்தில் இலங்கை ஓடி வந்த கோட்டபாய
மேலும் வெளிநாட்டு தமிழர் கட்சிகள் ,மற்றும் சில சமூக நலன் கொண்ட தனி நபர்கள் இணைந்து போர்க்குற்ற விசாரணை ஒன்றை ஏற்படுத்த உள்ளதாக கசிவுகள் தெரிவிக்கின்றன.
அவ்வாறான பேராபத்தில் இருந்து தப்பிக்கவே ,இலங்கைக்கு கோட்டபாய தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த கசிவுகள் நியம் என்றால் விரைவில் ,இவை தொடர்பானவிடயங்கள் அம்பலமாகும் என எதிர் பார்க்க படுகிறது .
கோட்டாபாய மற்றும் அவரது மனைவி முகத்தில், புன்னகை இழந்து பெரும்
இடரில் சிக்கியதை ,அவர்களது உடல் அசைவுகள் மூலம் காணமுடிகிறது .
தமிழர்கள் பட்ட வலியை இப்பொழுதேனும் கோட்டபாய உணந்திருப்பார் என்கிறது தமிழர் தேசம் .