டீசல் தட்டுப்பாடு மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவுக்கு
அதிகரித்து வருவதை கண்டித்து நுவரெலியாவில் பெருந்திரளான மக்கள் இன்று (01) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நுவரெலியா பஸ் நிலையத்திற்கு முன்பாக பெருமளவான மக்கள் திரண்டதால் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் சேவைகள் பல மணித்தியாலங்கள் தடைப்பட்டன.
பின்னர் நுவரெலியாவில் இருந்து கிரகரி லேக் பார்க் அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள்
பேரணியாக சென்று நுவரெலியா – பதுளை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்