நீ வேண்டும் எனக்கு
தேம்ஸ் நதியின் ஓரத்திலே
தெரு விளக்காய் எரிபவளே
நயாகரா அருவியாக
நான் ஓடி வந்திடவா ..?
கூலி இன்றி ஆறு வெட்டி
குரல் எழுப்பி ஆடி வரும்
அழகான நதி போல
அன்பே நான் வந்திட வா …?
உள்ளிருந்து துள்ளி வரும்
உருவத்தில் சிறிதான
மீன் போல நான் வரவா
மின்னல் போல் ஒளி தரவா ..?
குமரியில பூவெய்தி
குலை குலையாய் காய் காய்த்து
பழமாய் உதிர்கின்ற
பருவத்தில் வந்திட வா …?
எதுவாக நான் வரவோ
என் அன்பே பதில் தர வா
ஏங்கும் மனதொன்றின்
ஏக்கத்தை தனித்திட வா …..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 11-08-2021
உலக புகழ் பெற்ற
தேம்ஸ் நதி (லண்டன்
நயாகரா ( கனடா )
http://ethirinews.com/