நினைத்தது நடந்தது ….!

Spread the love

நினைத்தது நடந்தது ….!

நீ தொடுக்க வா
நான் முடிக்க வா
நிழல் தூங்க வா
நீர் ஓட வா ..?

பூமி வறண்டது
பூவும் உலர்ந்தது
வேரும் செழிக்கவே
வேண்டுதல் செய்ய வா ..?

இடி இடிக்க வா
இடர் மறைய வா
காற் றுதைக்க வா
கன மழை கொட்ட வா ..?

வெட்கை தனியவே
வீழ்ந்த மழையே
கால் தழுவியே
கடந்த வெள்ளமே

ஊரு சிரித்தது
உதடு மலர்ந்தது
வேரும் வைத்தது
வேண்டுதல் நிலைத்தது

வன்னி மைந்தன்
ஆக்கம் -07-10-2020
( சிலோடை சிணுங்கல்- இரட்டை அர்த்தம் )

Home » Welcome to ethiri .com » நினைத்தது நடந்தது ….!

Leave a Reply