நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிறை காணப்பட்டு வருகிறது – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

Spread the love

நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிறை காணப்பட்டு வருகிறது – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

பைஷல் இஸ்மாயில் –

எமது நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிறை காணப்பட்டு வருகிறது என்றும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டுக்கு புதிய துறைகளைக்

கற்ற துறை சார்ந்தவர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். இதனை அரசாங்கத்தினால் மட்டும் செய்துவிட முடியாது என்று கல்வி மறுசீலமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

கலந்துகொண்டார், விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மாலைதீவுக்கான தூதுவர் ஒமர் ரஸ்ஸாக், பிரதித் தூதுவர் அஸ்லம் சாகிர், சிறைச்சாலை ஆணையாளர் மலின் லியனகே, முன்னாள் கொழும்பு மாகாண சபை அங்கத்தவரும் மனித

உரிமைகள் அமைப்பின் ஆளுநருமான எ.ஜே.முஹம்மட் பாயிஸ், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி எஸ் சந்திரசேகரம் உள்ளிட்ட பல உள்நாட்டு வெளிநாட்டு கல்விமான்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இன்று இலங்கையின் பொருளாதார கல்வி வளர்ச்சியில் கணிசமான பங்கினை தனியார் துறையை துறையினரே வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அமேசன்

உயர் கல்வி நிறுவனத்தின் சேவை உண்மையில் பாராட்டத்தக்கது. இந்த நிறுவனம் வெறும் புத்தக கல்வியை மட்டும் மையமாக கொள்ளாமல், மாணவர்களுக்கிடையே சுய வேலைத்திட்டங்கள், (Individual Project) பயிற்சி பட்டறைகள் (practical workshops), வெளிநாட்டு மாணவர்களின்

தொடர்பாடல், (Foreign Students exchange), பல உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை கை சாத்தி, மாணவர்களுக்கு Individual Training போன்றவற்றை வழங்கி தொழில் சந்தைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயாரித்து அனுப்புகின்ற நிறுவனமாக இயங்கி வருகின்றது.

எதிர்வரும் ஆண்டுகளில் உலகிலேயே அதிகமாக தேவைப்படுகின்ற தொழிற்துறையான Robertic Engineering,Green Technology, Solor Technology, Hybrid technology, Cloud Computing, Automated System, Mobile

Technology, Wireless technology, போன்ற துறைகளுடன் தொடர்புடைய பாடநெகளையும் இந்த கல்வி நிறுவனம் வெகுவிரைவில் ஆரம்பிக்க உள்ளதை நான் பாராட்டுகின்றேன் என்றார்.

உலகை மாற்றுவதற்கான முதல் சக்தி, கல்வி அறிவு எவருக்கு நல்ல கல்வி அறிவு ஞானம் இருக்கிறதோ அவர்கள் எந்த துறையில் பயணித்தாலும் வெற்றி பெறுவது நிச்சயம் இந்த

அடிப்படையில் பம்பலப்பிட்டி அமேசன் உயர்கல்வி நிறுவனம் சுமார் 10 வருடங்களாக ஏனைய கல்வி நிறுவனங்களை விடவும் மாறுபட்ட முறையில் தனது கல்வி நடவடிக்கைகளை

முன்னெடுத்து வருகின்ற அதேவேளை பல சமூக சேவைகளையும், பல இலவச புலமைப்பரிசில் திட்டங்களையும் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டமளிப்பு விழாவில் 140 மாணவர்கள் உளவியலும் உளவளத்துணையும், ஆசிரியர் பயிற்சி நெறி, தகவல் தொழில்நுட்பம், கணக்கியல், போன்ற பல துறைகளுக்கான பட்டச் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

    Leave a Reply