நடிகையின் மச்சங்களை எண்ணிய நடிகர்

நடிகையின் மச்சங்களை
Spread the love

நடிகையின் மச்சங்களை எண்ணிய நடிகர்

நடிகையின் மச்சங்களை எண்ணி விட்டீர்களா…? பத்திரிகையாளரின் கேள்வியால் அதிர்ந்துபோன நடிகர்

டி ஜே டில்லு படத்தின் டிரைலரில் நாயகன் சித்து, “உன் உடலில் எத்தனை மச்சம் உள்ளது?” என்று நாயகி நேஹா ஷெட்டியிடம் கேள்வி கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

நடிகையின் மச்சங்களை எண்ணி விட்டீர்களா…? பத்திரிகையாளரின் கேள்வியால் அதிர்ந்துபோன நடிகர்
டிஜே தில்லு படத்தின் காட்சி

தெலுங்கு திரை உலகின் பிரபல சினிமா பத்திரிகையாளர் மற்றும் படத்தயாரிப்பாளர் சுரேஷ் கொண்டேத்தி. அவர் சந்தோஷம் என்ற வார இதழை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அவர் நடிகரிடம் அறுவறுக்கத்தக்க வகையில் கேட்ட கேள்வியால் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ‘டிஜே டில்லு’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது படத்தின் கதாநாயகன் சித்து ஜொன்னாலகடாவிடம், படத்தின் டிரைலரில் குறிப்பிடப்பட்டு உள்ளது போல்,

நிஜத்திலும் நடிகை நேஹா ஷெட்டியின் உடம்பில் மொத்தம் எத்தனை மச்சங்கள் உள்ளன என்பதை கணக்கிட்டு உள்ளீர்களா? என்று கேட்டு அதிர்ச்சியையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தினார்.

இப்படத்தின் டிரைலரில் நாயகன் சித்து, “உன் உடலில் எத்தனை மச்சம் உள்ளது?” என்று நாயகி நேஹா ஷெட்டியிடம் கேள்வி கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அதனை குறிப்பிட்டு பேசிய சுரேஷ், “நடிகையின் உடம்பில் 16 மச்சங்கள் உள்ளன என்று படத்தில் கண்டுபிடித்துள்ளீர்கள். அதை போல நிஜ வாழ்க்கையிலும் அவரது

மச்சங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்தீர்களா?” என்று நாயகன் சித்துவை நோக்கி கேட்டார். இந்த கேள்வியால் அதிர்ந்துபோன சித்து, எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை மதிக்கத் தெரியாத சுரேஷ் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகை நேஹா ஷெட்டியும் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

‘இது துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. சுரேஷ் பெண்களை மதிக்கும் முறை அவரது கேள்வியின் மூலம் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது’ என்று நேஹா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் தனது கேள்வியை நியாயப்படுத்திய சுரேஷ், ‘நான் எவ்வித இரட்டை அர்த்தத்திலும் அவ்வாறு கேட்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

“இது ஒரு காதல் படம், நான் ரொமான்டிக் கேள்வி கேட்டேன். எனது நோக்கம் தூய்மையானது. தயவு செய்து என்னை தவறான முறையில் பேசாதீர்கள்” என்கிறார் சுரேஷ்.

    Leave a Reply