தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கிளிநொச்சிக்கு விஜயம்
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் (13) மாலை 5.30 மணியளவில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.
கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடினார்.
நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
இந்த கலந்துரையாடலில் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.