காவல்துறையினரை இடித்து விட்டு தப்பி சென்ற டிப்பர்

Spread the love

காவல்துறையினரை இடித்து விட்டு தப்பி சென்ற டிப்பர்

மாத்தறை ஹக்மன, கோங்கால பொலிஸ் காவலரன் பகுதியில் பொலிஸாரின்

மீது விபத்தினை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் வண்டி ரன்ன பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ரன்ன, கட்டகடுவ பிரதேசத்தில் வீடு ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

நிலையில் குறித்த டிப்பர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றிரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு பொலிஸ்

சார்ஜன்ட்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது

செய்வதற்கான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

      Leave a Reply