தெஹிவளையில் கைகுண்டு மீட்பு
தெஹிவளையில் கட்டிடமொன்றில் இன்று (06) புதன்கிழமை காலை கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில், கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்
ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தெஹிவளை பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.
தெஹிவளையில் கைகுண்டு மீட்பு
பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் கைக்குண்டு மீட்கப்பட்டது.
இலக்கம் 124 அனகாரிக தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் கைவிடப்பட்ட நிர்மாணத் தளமாகவே உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
- வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை
- இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி
- வானிலை இடியுடன் கூடிய மழை
- இந்த நாட்டின் வர்த்தக சமூகம்
- மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை