துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்

துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்
Spread the love

துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்

மொரகஹஹேன மிரிஸ்வத்த பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் மக்கள் மரணம்.ஆட்டோ ஒன்றின் மீது பொலிஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் பலி ஏற்பட்டுள்ளது .

ஆட்டோவை நிறுத்தும் படி பொலிஸ் சமிக்கை காண்பித்த பொழுதும் ,ஆட்டோ நிற்காது சென்றதினால் ,அந்த ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டது .

இதன் பொழுது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர் . அதில் இருந்து ஒருவர் தப்பித்து சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

போதைவஸ்து கடத்தல்

இந்த ஆட்டோ போதைவஸ்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ,அப்பொழுதே அந்த ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

காலுக்கு கீழே மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்கின்ற விதி உள்ள பொழுது ,உடலின் ஏனைய பகுதியில் குண்டு பாய்ந்தது எப்படி என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் சடலம் மீட்க பட்டு மருத்துவமனையின் ,மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

பொலீஸ் மீது விசாரணை மக்கள் கோரிக்கை

மக்கள் பயன்படுத்தும் ஆட்டோ மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்த பட வேண்டும் என மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளன .

முன்னரும் சிவில் உடையில் நின்ற காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் மக்கள் பலியாகி இருந்தனர் .

அந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ,தற்போது இந்த சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .