துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Spread the love

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சோதனை நடவடிக்கையின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

வெலிகம – பெலேன பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (31) அதிகாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்திய வேனை வெலிகம பொலிஸார் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது இடம்பெற்ற பதில் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ