தீயில் எரிந்த 60 வீடுகள் போதைக்கு அடிமையானவர்கள் எரியூட்டல்
இலங்கை கொழும்பு பகுதியில் அமைந்துள்ள காஜி மவத்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 60 வீடுகள் எரிந்துள்ளன .
இதே பகுதியில் 300 மர வீடுகள் கொண்ட ,குடியிருப்பு பகுதியான இந்த பகுதி காணப்பட்டுள்ளது .
இங்கே ஒரு வீட்டில் போதைக்கு அடிமையானவர்கள் வசித்து வந்துள்ளனர் .
அந்த வீட்டில் இருந்தே முதலாவது தீ பரவல் ஏற்பட்டுள்ளது .
அதன் பின்னரே ஏனைய வீடுகளுக்கும் தீ பரவியுள்ளது .
தமது உடைமைகள் யாவும் இழந்து மக்கள் தற்போது அகதிகளாக உள்ளனர் .
தொடந்து தீ பிடித்தல் சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டறியும் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
போதைக்கு அடிமையானவர்களினால் இந்த வீடுகள் எரியூட்ட பட்டுள்ளது என்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .