திருமணம் முடிக்க நான் வாரேன்

Spread the love

திருமணம் முடிக்க நான் வாரேன்

தீச்சுவாலை சமரதுவாய்
தீண்டி என்னை வருபவளே
வழிமறித்து தாக்கிடவே
வழியமைத்து கொடுப்பவளே

ஊந்துகணை தோள் சுமக்க
ஊடறுப்பை நான் தொடுக்க
சமராட அழைப்பவளே
சம்மதமா நான் வென்றிடவே …?

சூரிய கதிர் முற்றுகையாய்
சுற்றி என்னை வலைத்தாயோ ..?
தவளை பாய்ச்சால் நடவடிக்கையில்
தத்தளித்து நின்றாயோ …?

நீரூந்து விசை படகாய்
நீந்தி வலம் வந்தவளே
துறைமுகத்தில் நான் புகுந்து
துணிவுடனே கடத்தி விட்டேன்

பூநகரி தாக்குதலோ
புது வரவை தந்து விட
ஏறி களம் ஆடி நின்றோம்
எரிமலையாய் வெடித்து வந்தோம்

ஆழ பிறந்தவர் நாம் தானே
ஆள்வோமே மீள்வோமே
தலிபான்கள் போல
தலைமையில மிதப்போமே

கொஞ்ச நாள் பொறுத்திருப்பாய்
கொளகை தன்னை வளர்த்திருப்பாய்
நஞ்சை கட்டி களம் திறக்கும்
நாளில் என்னை மணப்பாய் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 02-09-2021
http://ethirinews.com/

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply