திருட வீடு புகுந்தவரை அடித்து கொன்ற மக்கள்

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Spread the love

திருட வீடு புகுந்தவரை அடித்து கொன்ற மக்கள்

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் கொள்ளையிடச் சென்று வீட்டின் உரிமையாளரை தாக்கி கொள்ளையடிக்க முற்பட்டபோது கொள்ளையர் மீது

மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொள்ளையடிக்க சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பாடசாலை வீதி மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பரசுராமன் நவரட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்கம்கேணி பிரதேசத்தில் நேற்று இரவு 10 மணியளவில் வீடு ஒன்றில் இருவர் கொள்ளையடிக்க சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கொள்ளையர்கள் வீட்டிலுள்ளவர்களை தாக்கி அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடிக்க முற்பட்டனர்.

இதன்போது தாக்குதலுக்குள்ளான வீட்டின் உரிமையாளர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள கொள்ளையர் மீது தாக்கிய போது

கொள்ளையன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் சென்ற கொள்ளையர் தப்பி ஓடியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த கொள்ளையன் 63 கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர் எனவும் சம்பவதினமான நேற்று

பிறிதொரு வீடு ஒன்றில் கொள்ளையடித்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டபோதே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த குறித்த கொள்ளையனின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றன

      Leave a Reply