தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?

தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?
Spread the love

தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?

தமிழ் தேசிய மக்கள் முன்னனியைத் தேடி பொலிசார் யாழில் விசே கைது வேட்டையை ஆரம்பித்துள்ளதுடன், அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கைது செய்யப்படலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழ் வடமராட்சி, மருதங்கேணி பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பொலிஸ் புலனாய்வு துறையினர் தாக்குதல் நடத்தியமை மற்றும்

பொலிசார் சுட முற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையளில் பொலிசார் கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?

கட்சியின் மகளிர் அணித் தலைவி மற்றும் ஒரு நபர் இன்று மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கஜேந்திரகுமார் எம்.பியையும் பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் அங்கு வைத்து கைது செய்யப்படலாம் என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இது குறித்து கஜேந்திரகுமார் எம்.பி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

No posts found.