தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

Spread the love

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்
எடப்பாடி பழனிசாமி- முக ஸ்டாலின்.
சென்னை:

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு மார்ச் 27, ஏப்ரல் 1-ந்தேதி, ஏப்ரல் 6-ந்தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1-ந்தேதி, ஏப்ரல் 6-ந்தேதி, ஏப்ரல் 10-ந்தேதி, ஏப்ரல் 17-ந்தேதி, ஏப்ரல் 22-ந்தேதி, ஏப்ரல் 26-ந்தேதி, ஏப்ரல் 29-ந்தேதி (இன்று) என 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இன்று கடைசி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.

திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை கைப்பற்றும் என ரிபப்ளிக் – சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு 58 முதல் 68 இடங்களும் அமமுக 4-6, மநீம+0-2: இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு விவரம்:

தகவல்கள்

திமுக+

அதிமுக+

அமமுக+

ஏ.பி. நியூஸ்- சி வோட்டர்

160-172

58-71

0

பி.மார்க்

165-190

40-65

1-3

ரிபப்ளிக் டிவி- சிஎன்எக்ஸ்

Leave a Reply