பெற்றோருக்கு கொரோனா… உதவி கேட்கும் நடிகை

Spread the love

பெற்றோருக்கு கொரோனா… உதவி கேட்கும் நடிகை

பிரபல தமிழ் நடிகை ஒருவரின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தனது சமூக வலைதளம் மூலம் உதவி கேட்டுள்ளார்.

பெற்றோருக்கு கொரோனா… உதவி கேட்கும் நடிகை
சம்யுக்தா ஹெக்டே


ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ படத்தில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவருடைய பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தனது சமூக வலைத்தளத்தில்

தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைத்தள பக்கத்தில் தனது தந்தைக்கு ரெம்டிசிவிர் மருந்து

தேவை என்றும் தனக்கு தொடர்பு உள்ளவர்களிடம் அந்த மருந்தை கேட்டுள்ளதாகவும் அந்த மருந்தை கிடைக்க உதவி செய்யவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சம்யுக்தா

தனது பெற்றோரை வீட்டில் வைத்து சிகிச்சை செய்து வருகிறோம். இருவரையும் தான் கவனித்துக்

கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தயவு செய்து தனக்கு ரெம்டிசிவிர் மருந்து கிடைக்க உதவி செய்யவும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Leave a Reply