டிக் டாக்கில் மதுபான தயாரிப்பு 6 வாலிபர்கள் கைது

டிக் டாக்கில் மதுபான தயாரிப்பு 6 வாலிபர்கள் கைது
Spread the love

டிக் டாக்கில் மதுபான தயாரிப்பு 6 வாலிபர்கள் கைது

பொசன் பௌர்ணமி தினத்தன்று டிக் டாக்கில் மதுபான தயாரிப்பு கலவையில் செயல்பட்ட 6 வாலிபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .

.நடத்தப்பட்ட மதுபான ‘தன்சல’ காட்சியை சமூக ஊடகமான ‘டிக்டோக்’ தளத்தில் பதிவேற்றம் செய்து, மதுபானத்தை விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆறு இளைஞர்களை இலங்கை காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பொலிஸ் மா அதிபர் (IGP) இது தொடர்பான விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

அதன்படி, 20 முதல் 25 வயதுக்குட்பட்ட 6 பேர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து வீடியோ தொடர்பாக நீண்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

டிக் டாக்கில் மதுபான தயாரிப்பு 6 வாலிபர்கள் கைது

இவர்கள் கட்டுநாயக்க பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது, ​​இளைஞர்கள் தங்கள் உறவினர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட வெற்று வெளிநாட்டு மதுபான போத்தல்களில் தேநீரை ஊற்றியதாகவும், டிக்டோக்கில் வெளியிடுவதற்காக வீடியோ கிளிப்பை தயாரிப்பதற்காக இந்த செயலை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த ஆறு பேரையும் கைது செய்த புலனாய்வு அதிகாரிகள், கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

No posts found.