ஜேர்மன் கடைக்குள் இருவர் சுட்டுக்கொலை

Spread the love

ஜேர்மன் கடைக்குள் இருவர் சுட்டுக்கொலை

இன்று மதியம் ஒரு மணியளவில் ஜெர்மன் நாட்டின் பிரபல சூப்பர் மார்க்கட்டாக
விளங்கும் அல்டி கடைக்குள் வைத்து இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்

மரம் ஆயுத தாரிகளினால் ஜேர்மன் அல்டி கடைக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி
சம்பவம் நாடளாவிய ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த கடைக்குள் இறந்தவர்களில் ஒரு ஆணும் பெண்ணும் என தெரிவிக்கப் படுகிறது, ஐம்பத்து எட்டு வயதை சேர்ந்த ஆணும் பெண்ணுமே பலியாகியுள்ளனர்

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை


,குறித்த ஜேர்மன் அல்டி கடை பகுதியை சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்க பட்டுள்ளனர்
மேலும் தடவயில் நிபுணர்கள் சென்று அங்கு பதியப்பட்ட தடவியல் விபரங்களை சேகரித்த வண்ணம் உள்ளனர்

தற்போது அங்கு நிலைமை கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாகவும் ,மீள
ஆபத்து ஏதும் அந்த பகுதியில் இல்லை என காவல் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்

ஜேர்மன் கடைக்குள் இருவர் சுட்டுக்கொலை

ஜேர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு படுகொலைக்கு அந்த நாட்டின் அதிபர் குற்றவாளிகள் கைது செய்ய பட்டு தண்டிக்க படுவார் என தெரிவித்துள்ளார்

துப்பாக்கி சூட்டில் சிக்கி இறந்தவர்களுக்கு அந்த பகுதி எம்பி தனது இரங்கலை தெரிவித்துள்ளார் ,இதற்கு முன்னரும் ஜேர்மனியில் நடத்த படவிருந்த பெரும் தீவிரவாத தாக்குதல் முறியடிக்க பட்டு தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் கைது செய்ய பட்டனர்

அல்டி கடைக்குள் இறந்தவர்களது சடலம் மரண விசாரணைகள் முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் கையளிக்க படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

ஜேர்மன் அல்டி கடை பகுதியில் இறந்த மக்களுக்கு அங்கு வருகை தரும் மக்கள் மலர் வளையம் வைத்து தமது அஞ்சலிகளை செலுத்திய வண்ணம் உள்ளனர், குறித்த தாக்குதல் சம்பவ விசாரணைகள் முடியும் வரை அந்த அல்டி கடை அடித்து பூட்ட பட்டுள்ளது

ஜேர்மனியில் அல்டி கடைக்கு பொருட்கள் கொள்வனவு செய்திட வந்த அப்பாவி வயதானவர்கள் பலியான சம்பவம் துயரை ஏற்படுத்தியுள்ளது .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply