சீதன கொடுமையால் மனைவியை அடித்து கொன்ற கணவன்

Spread the love

தென்சூடானில் -சீதன கொடுமையால் மனைவியை அடித்து கொன்ற கணவன்

தென் சூடான் -Gok மாகாணத்தில் 20 வயது இளம் மனைவியை கணவன் அடித்து கொன்றுள்ள செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மச்சான் முறையானவருக்கு தமது மகளை திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர் ,அப்பொழுது அவருக்கு சீதனமாக இருநூறு மாடுகள் ,மற்றும் நகைகள் தருவதாக திருமண பேச்சாக இருந்தது

ஆனால் குறிப்பிட்ட படி டவுரி வழங்க தாமதமான நிலையில் ஆத்திரமுற்ற மாப்புள்ள மனைவியை
வதை செய்து அடித்து கொன்றுள்ளான் .

தமது மகள் நலமுடன் வாழ்வார் என தமது சொந்த உறவுக்குள் திருமணம் முடித்து வைத்த பெற்றோருக்கு மகளை சடலமாக தருவான் என அவர்கள் சற்றும் எதிர் பார்த்திருக்க வில்லை .

இருபது வயது ஆசை மகளை அடித்து கொன்ற மணமகனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்ற நீதியை எதிர்பார்த்து காத்துள்ளனர் .

இவர்கள் எதிர்பார்க்கும் அந்த நீதி நீதிமன்றினால் வழங்க படுமா ..?


கவலை தோய்ந்த முகத்துடன் கண்ணீரில் வாடும் இந்த குடும்ப உறவுகளுக்கு ஒருவர் எடுத்த தவறான முடிவினாலும் ,அறியாமையினாலும் ,வறுமையின் இயலாமையினாலும்

நடந்து முடிந்த இந்த துயர சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

இருபதாவது வயதில் தமது மகளை பறிகொடுத்து தவிக்கும் இவர்களுக்கு ,ஆறுதல் கூறுவார் யார் ..?

சீதன கொடுமையால் மனைவியை அடித்து கொன்ற கணவன்

வாழ வேண்டிய வேளையில் சீதனத்தை மூலதனமாக கொண்டு திருமணம் முடிக்கும் இது போன்ற சோம்பேறி மாப்பிளை மார்கள் என்று திருந்துவார்கள் ..?

இவர்கள் சீதனத்தை கேட்டு வாங்கி பெண்ணை அடிமை படுத்தி ,அந்த மொத்த குடும்பத்தையும் கண்ணீரில் ஆழ்த்திய இந்த கொடும் செயல்

சமூக நீதியில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என பாதிக்க பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

தமது வாழ்வை தாமே தீர்மானித்து கொள்ள முடியாது மணமகள் வீட்டாரை கொடுமை படுத்துவது எவ்விதத்தில் ஏற்று கொள்ள முடியும் ..?

இதே பகுதியில் இது போன்று மேலும் மூன்று இளம் பெண்கள் இவ்வாறு அநியாயமாக படுகொலை செய்ய பட்டுள்ளனர் .

சீதன வன்கொடுமையால் இந்த அப்பாவி உயிர்களை இளம் வயதில் பறிக்க பட்டுள்ளது
உலக மானிட சமூகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

Leave a Reply