சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கடத்தல்

Spread the love

சிங்கள கடற்படையால் தமிழக மீனவர்கள் 28 பேர் கடத்தல்

இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 28 பேரை அந்நாட்டு கடற்படை கைது செய்தது.

ராமேசுவரம் மீனவர்கள் 28 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலையில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 5 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். இலங்கை கடல் பகுதிக்குள் வந்து

மீன்பிடித்ததாக கூறி 4 விசைப்படகுகளையும், அதில் இருந்த 28 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

பின்னர் 28 பேரையும் கைது செய்து, இலங்கையின் நெடுந்தீவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 4 படகுகளும் அங்கு கொண்டு செல்லப்பட்டன.

ராமேசுவரம் மீனவர்கள் 28 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply