கோட்டபாயா தோல்விக்கு நாமலே காரணமாம் வெடித்த சண்டை

பதவி விலக தயாராகும் மத்திய வங்கி ஆளுநர் - நெருக்கடியில் - கோட்டா
Spread the love

கோட்டபாயா தோல்விக்கு நாமலே காரணமாம் வெடித்த சண்டை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்‌ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்‌ஷவே காரணமென ஸ்ரீலங்கா

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண குற்றம் சுமத்தியுள்ளார்.

செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சன்ன ஜயசுமண,

கோட்டாபய ராஜபக்‌ஷ கட்சியின் ஆலோசனைக்கு செவிசாய்த்து அதன்படி செயல்படுவார் என பொதுஜன பெரமுன எதிர்பார்த்தது.

கோட்டபாயா தோல்விக்கு நாமலே காரணமாம் வெடித்த சண்டை

“முதல் சில மாதங்கள் கோட்டாபய ராஜபக்‌ஷ அவ்வாறு செயற்பட்ட போதிலும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளை அவர் புறக்கணித்தார்,”

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் சில குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை மாத்திரமே கோட்டாபய ராஜபக்‌ஷ

செவிமடுத்ததாகவும், அதனால் தான் கோட்டாபய ஜனாதிபதியாக தோல்வியடைந்ததாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசனைக்கு செவிசாய்த்திருந்தால் கோட்டாபய ராஜபக்‌ஷ தோல்வியடைந்திருக்க மாட்டார் என்றார்.