கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்தது

கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்தது
Spread the love

கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்தது

மோசமான வானிலை காரணமாக கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (07) பிற்பகல் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது குறித்த மரம் விழுந்ததில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி கொழும்பில் பஸ் மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்தது

அக்டோபர் 30ஆம் திகதி அதே சாலையில் மற்றொரு மரம் விழுந்ததில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த பாதுகாப்பற்ற நிலை குறித்து கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் தெரிவிக்கையில்

நேற்றைய மோசமான வானிலை காரணமாக கொழும்பில் 36 மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து வீழ்ந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக . குறிப்பிட்டுள்ளார்.

ஆபத்தான மரங்களை அடையாளம் காணும் இயந்திரம் கொழும்பு மாநகர சபையிடம் இருந்தாலும் அதனை பயன்படுத்துவதற்கு ஆள் இல்லை என மாநகர ஆணையாளர் தெரிவித்தார்