கொரோனா நோயால் 1020 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரோனா வைரசு நோயாளர்களின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினத்தில் (2020.05.19) இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 28 பதிய நோயாளர்கள்;
பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
இந்த நோயாளர்கள் 28 பேரும் ஒலுவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கடற்படை அங்கத்தவர்கள்.
இன்றைய தினத்தில் இதுவரையில் இலங்கையில் பதிவான கொரேனா
வைரசு நோயாளர்களில் 569 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேபோன்று இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 442 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நேற்றைய தினத்தில் (2020.05.18) மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைகளின்
எண்ணிக்கை 960 ஆவதுடன் இத்தினத்தில் அடையாளங் காணப்பட்ட
நோயாளர்களின் எண்ணிக்கை 11 ஆகும் என்றும் சுகாதார சேவைகள்
பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்