கொரோனா தாக்குதலில் 10,030 பேர் பலி
கொரோனா வைரஸ் இதுவரை 160 நாடுகளில் பரவி உள்ளது. 244,517 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ள நிலையில் 10,030 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 86,025 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இத்தாலியில் 3405 பேர் உயிரிழந்துள்ளனர்.
“எனினும், கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று நோய்களை அடக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நாடுகள் தங்களது
குடிமக்களை தனிமைப்படுத்தி, சோதித்து, தக்க சிகிச்சை அளிக்க
வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில்
பரிசோதிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸுக்கு எதிரான
தடுப்பூசி ஒரு “நம்ப முடியாத சாதனை” என்று டெட்ரோஸ் பாராட்டு
கவர்ச்சிப் பத்திரிகையான ப்ளேபாயும் கொரோனா வைரஸ்
தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது.