கொரனோ கொலைவெறி -அமெரிக்காவில் 3,098 பேர் பலி -பிரிட்டனில் 744 பேர் பலி
இரண்டாம் அலையாக மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு
மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,098 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 203,467 பேர் புதிதாக ஒரே நாளில்
பாதிக்க பட்டுள்ளனர் ,இதைவிட 28,693 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
இதே போல பிரிட்டனில் 744 பேர் பலியாகியும் 39,237 பேர் பாதிக்க பட்டுள்ளனர் 1,529 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
இந்த நோயின் அதிகரிப்பை அடுத்து எதிர்வரும் நத்தார் தினத்திற்கு
பின்னர் முழு அடித்து பூட்டும் நிகழ்வுக்கு பிரிட்டன் செல்ல கூடும் என அஞ்ச படுகிறது
இதன் காரணத்தால் பலசரக்கு அங்காடிகளில் மக்கள் பெரும்
தொகையில் சென்று பொருட்களை அள்ளி செல்வதை அவதானிக்க முடிகிறது