கொரனோவை விரட்ட வழி சொன்ன வற்றாப்பளை அம்மன் -லண்டன் தமிழர் வீடுகளில் நடந்த அதிசயம் photo
உலக நாடுகளில் பரவி வரும் கொரனோ வைரசின் தாக்குதல் எதிரொலி காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .
இவ்வேளை வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை அம்மன் ஆலய குருக்களுக்கு அம்மன் கனவில் வந்து இந்த கொரனோவை கட்டு
படுத்தும் வழியை சொன்னார் என கூறி ஒரு பெண்மணி பதிவு செய்த குரல் வடிவிலான செய்தி அதி வேகமாக பரவியது
அதில் மாவில் ஐந்து சிட்டி செய்து அதில் எண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,அதன் பின்னர் அந்த தீ கரியை எடுத்து வீடு
முழுவதும் தெளித்தால் இந்த நோயின் கிருமிகள் செத்து விடும் என்பது அந்த செய்தி
அதுவும் இருள் கூடுவதற்கு முன்னதாக செய்திட வேண்டும் என்பது இதன் விதியாக இருந்தது
இதனை நம்பிய மக்கள் ,குறிப்பாக லண்டனில் பல தமிழர் வீடுகளில் இந்த விளையாட்டு நடந்தது
அவ்வாறு நடந்த சில காட்சிகளை இங்கே தருகிறோம் .
விடயம் என்னவென்றால், இதன் மூலம் எப்படி இந்த கிருமி அழியும் என்பதே
வந்தது கொரனோ இவ்விதம் பல வதந்திகள் வேகமாக பரவிய வண்ணமே உள்ளது
ஆறாம் அறிவு என்று ஒன்று உள்ளதல்லவா ,அதனை மக்கள் புரிந்துசெயல் பட வேண்டும்