கொரனோவால் இறந்தால் ஐந்து லட்சம் இழப்பீடு

Spread the love

கொரனோவால் இறந்தால் ஐந்து லட்சம் இழப்பீடு

காரணமாக உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளருக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடுஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு

சென்று கொவிட் 19 தொற்றினால் உயிரிழக்கும் பணியாளர்களுக்காக அலுவலக காப்புறுதி இழப்பீடு வழங்கப்படும்

என்று வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போருக்கு எதிராக 5 இலட்சம் ரூபா அல்லது 6 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படும். அத்தோடு இலங்கை காப்புறுதி

கூட்டுத்தாபனத்தின் மூலம் ஏற்படுத்திக்கொண்டுள்ள 2019 உடன்படிக்கைக்கு அமைவாக அலுவலகத்தில் பதிவை மேற்கொண்டு வெளிநாட்டில் தொழிலில் ஈடுபட்டுள்ளபோது

இடம்பெறும் இயற்கை மரணத்திற்காக வழங்கப்படும் இழப்பீடான 5 இலட்சம் ரூபா, கொவிட் 19 நோய்த் தொற்றினால் உயிரிழக்கும் பணியாளர்களுக்காக செலுத்தப்படுகின்றது.

தற்பொழுது இதற்காக 20 பேரின் கடித ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுவருகின்றது. 2020 மார்ச் மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னர் பதிவை மேற்கொண்டு வெளிநாடு சென்றவர்களுக்காக

இந்த இழப்பீடு 6 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பணியகத்தில் பதிவை மேற்கொள்ளவேண்டிய கால எல்லை கடந்த போதும் அதனை புதுப்பிக்காது பணிபுரிந்து

உயிரிழப்போருக்கு காப்புறுதி இழப்பீடு வழங்கப்படமாட்டாது. இவர்களுக்காக பணியகத்தில் விசேட சேமநல நிதியின் கீழ் 3 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படும்.

இந்த வருடத்தில் கடந்த 6 மாத காலப்பகுதியில் பணியகத்தில் பதிவை மேற்கொண்டு தொழிலுக்காக வெளிநாடு சென்ற 40,143 பணியாளர்களுக்காக இலவசமாக வழங்கப்படும் நிவாரண

காப்பறுதியை வழங்குவதற்காக பணியகத்தினால் காப்புறுதி தவணைக் கொடுப்பனவாக ரூபா 26,330,000.00 தொகை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக உயிரிழப்போரின் இறுதிச் சடங்கிற்காக 40,000 ரூபா வீதம் வழங்கப்படும். இத்தொகை முன்னர் 30,000 ரூபாவாக இருந்தது. கொவிட் 19 இன் காரணமாக இத்தொகை 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரசின் காரணமாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்காக சென்றோரில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 37 பேர் ஆண்களும் 3 பெண்களும்

அடங்குகின்றனர். சவுதி அரேபியாவில் 18 பேரும் குவைத்தில் 9 பேரும் ஐக்கிய அரபு எமரேட்டில் 8 பேரும், ஓமானில் இருவரும், லெபனானில் ஒருவருமாக 40 பேர் உயிரிழந்துள்ளன

      Leave a Reply