கடற்றொழில் முறைகளை வடக்கில் உடனடியாக தடைசெய்ய அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

Spread the love

கடற்றொழில் முறைகளை வடக்கில் உடனடியாக தடைசெய்ய அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

வடபகுதி கடற்பரப்புகளில்; தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை கையாண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடைசெய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட நிலையில்

அமைச்சரவையினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த சட்டவிரோத தொழில் முறைமைகளை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை

நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்பதாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளின்போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள்

தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பார்வைக்கு கொண்டுவந்திருந்தனர்.

குறிப்பாக எல்லைதாண்டிய கடற்றொழிலாளர்களது சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டவிரோத உபகரணங்கள் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதை தடுத்தல் அட்டைத் தொழிலுக்கான

அனுமதியை இரத்துச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு தமது தொழில்துறையை

பாதுகாத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்தே குறித்த பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அது தொடர்பில் அமைச்சரவையில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்த கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்படையினர் உள்ளிட்ட துறைசார் தரப்பினருக்கு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக அத்தகைய சட்டவிரோத தொழில் முறைமைகளை தடுப்பதற்கான

நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்பரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

      Leave a Reply