குழந்தை படத்தைக் காட்டி மோசடி செய்த இருவர் கைது
நுவரெலியாவில் சிறு குழந்தையொன்றின் படங்களையும் மருத்துவ அறிக்கையையும் காட்டி பொதுமக்களிடம் பணமோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையின் தந்தையால் தம்பனை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் குழந்தையின் படங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையை சட்டவிரோதமாக பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குழந்தை படத்தைக் காட்டி மோசடி செய்த இருவர் கைது
பண நன்கொடைக்கான தொடர்புத் தகவலாக அவர்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தியதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 25 மற்றும் 34 வயதுடைய இவர்கள் மிதிகம மற்றும் அஹங்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள்.
மேலும் நன்கொடையாக சேகரிக்கப்பட்ட ரூ. 10,900 பணத்தையும் பொலிஸார் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றினர்.
- காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
- அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
- காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்
- மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
- சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
- டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்
- தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்
- வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்
- மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு
- வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி
- மாணவன் அடித்து மாணவன் பலி
- மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்