கிளிநொச்சியில் நபரை தாக்கிய கரடி
கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் காட்டுக்கு விறகு வெட்ட சென்ற முப்பத்தி எட்டு வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை அங்கு வந்த கரடி தாக்கியுள்ளது.
இந்த கரடியின் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் நபரை தாக்கிய கரடி செயல்பாடு தொடர்பான விடயம் பரவிய நிலையில் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது .
காட்டு யானைகள் மக்களை தாக்கி வரும் நிலையில் தற்போது கரடிகளும்
கிளிநொச்சியில் தாக்குதலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளதே இந்த பீதி நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.