காதலியை துண்டு துண்டாக வெட்டி வீசிய காதலன்
இந்தியா டில்லி பகுதியில் காதல் தகராறு காரணமாக ,காதலியை துண்டு துண்டாக வெட்டி வீசிய காதலன் சிறை பிடிக்க பட்டார் .
நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பொழுது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது ,அதன் பின்னர் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர் .
தன்னை திருமணம் முடிக்கும் படி காதலி வலியுறுத்தி வந்துள்ளார் .அதனால் எழுந்த சண்டை காரணமாக ,காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் .
கோபத்தில் காதலியை கொலை செய்த பின்னர் செய்வதறியாது திணறிய காதலன் ,காதலியின் உடலை துண்டு துண்டுகளாக வெட்டி குளிர் சாதன பெட்டியில் வைத்து ,இரவு நேரங்களில் பல பகுதிகளுக்கு சென்று உடலின் துண்டுகளை வீசியுள்ளார் .
காதலியின் தோழி ஒருவர் தந்தையை தொடர்பு கொண்டு இரண்டு மாதமாக மகளின் தொலைபேசி செயல் இழந்துள்ளது, எதாவது தெரியுமா என வினவிய பொழுதே, தந்தை காவல்துறையில் மகளை காணவில்லை என்வும் ,குறித்த நபருடன் தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார் .
இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணைகளில் ,இந்த கொலை சம்பவம் அம்பலமாகியுள்ளது .
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .