காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு
Spread the love

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு

கடந்த ஒக்டோபர் முதலாம் திகதியன்று காணாமல் போயிருந்த மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் இன்று காலை மாத்தறை உயன்வத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18 மற்றும் 19 வயதுடைய இரண்டு யுவதிகளும் ஒக்டோபர் 1 ஆம் திகதி டியூஷன் வகுப்புகளுக்குச் சென்று வீடு திரும்பவில்லை என முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு

மாத்தறை, உயன்வத்தையில் தாம் தங்கியிருந்த விடுதியிலிருந்து அவர்கள் பணிபுரியும் கடைக்குச் சென்றுகொண்டிருந்த போது அடையாளம் காணப்பட்ட இருவரும் இன்று காலை மாத்தறை பொலிஸாரால் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.

மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் நிலையத்தினூடாக குறித்த இருவரின் பெற்றோருக்கும் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இரு யுவதிகளும் தமது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

வீடியோ