ஏ மனமே கவலை விடு …!
ஈர் விழியில் நீர் தாங்கி
இடிந்து போய் நிற்பவளே
உன் பாதி சுமை தாங்கி
உதவுகிறேன் வா மகளே
ஊற்றெடுக்கும் கண்ணீரை
உள்ளே கொஞ்சம் அடைத்து விடு
உள்ளத்தில் தென்பை மட்டும்
உரமாக ஏற்றிவிடு
ஓடி வரும் தோல்விகளை
ஓரமா எறிந்து விடு
ஓட கொஞ்சம் காற்றும் கொண்டால்
ஓடி விடும் தெரிந்து விடு
ஏறும் போதே படிகளை
எண்ணி நீ ஏறி விடு
எண் கணக்கு சரி என்றால்
ஏற்றம் வரும் கொஞ்சி விடு
திட்டங்கள் இரண்டு வைத்து
தினம் தோறும் நடந்து விடு
துரத்தி வரும் துயர் எல்லாம்
துகள்களாகும் புரிந்து விடு
எவரெஸ்ட்டாய் என்றுமே
எண்ணி நீ நடந்து விடு
எவரெஸ்ட்டாய் நீ இருப்பாய்
ஏ மனமே கவலை விடு
வன்னி மைந்தன்
ஆக்கம் -30-07-2020