உன்னை காப்பாற்று ….!

Spread the love

உன்னை காப்பாற்று ….!

கொழும்பு நகர் வீதியிலே
கொழுத்து பருத்து போறவளே
பரா ஊர்தி வருகுதடி
பார்த்து சாலை போயிடடி

கட்ட காலி நாய்கள் எல்லாம்
கால் வைத்து நடக்குதடி
கிழிந்த ஆடை உடல் காட்டி
கிளிப்புள்ள போகையில

நாய் வந்து கடிக்காத
நாராய் தான் உரிக்காத …?
கற்பை தின்று உடல் வீசும்
கடை வீதி திறக்காதே

சுதந்திர நாட்டுக்குள்
சுட்டு காட்டை விதைக்காதே
பெண் எல்லாம் அழகி என்ற
பேரழகை துவைக்காதே

கறுப்பு தார் வீதியில
கால் வைத்து போகையில
வீடு வர வேண்டுமடி
வேண்டி நீ நடந்திடடி

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 30-06-2020

Home » Welcome to ethiri .com » உன்னை காப்பாற்று ….!

Leave a Reply