கடலில் மூழ்கி பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்
கடற்கரையில் தனது நண்பர்கள் குழுவுடன் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
களுத்துறை, நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதான தெஷாஞ்சன தரிந்த என்ற கான்ஸ்டபிளே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்