கஞ்சா பயிர்ச்செய்கை விரைவில் சட்டப்பூர்வமாகும்

கஞ்சாத்தோட்டம் அழிப்பு
Spread the love

கஞ்சா பயிர்ச்செய்கை விரைவில் சட்டப்பூர்வமாகும்

கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி வழங்கும் வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இந்த வேலைத்திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தினால், வருடத்திற்கு 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.